எனக்கு சிலர பாத்தாலே கடுப்பா இருக்கும்..என்னைய கடுப்பேத்துறதுல முக்கியமான ஆளு இந்த சுப்பிரமணியசாமி..இவர்(ன்) பேசுர தமிழக்கேட்டாலே பயங்கர எரிச்சலா இருக்கும்..புலிகள் மேலான தடையை நீக்குறது தொடர்பான விசாரணையில சம்மன் இல்லாம ஆஜராகி எக்ஸ்ட்ரா கடுப்பேத்துறார்(ன்)...(ஒரு முட்டை வீச்சு பத்தாது)
கவிஞர் காசிஆனந்தனின் குறுந்தகடு வெளியீட்டு விழாவில் பழ.நெடுமாறன் வெளியிட்ட நிகழ்வுகள் அதிர்ச்சி ரகம். தான் மட்டுமே தமிழர்களுக்கு தலைவனா இருக்கனுமுனு நினச்சி, அப்பவே ஈழபோராட்ட்த்துக்கு குழிபறிச்ச கலைஞரை என்னனு சொல்ல.?.எனக்கு வரவர கலைஞர் மேல இருக்குற மரியாதை கொறஞ்சிகிட்டே வருது..
------------------------------------------------------------------------------------------------------
கடவுளுக்கு தொண்டு செய்வது புண்ணியம்னு சொல்லுவா..ஆனா அதுக்கு அரசாங்கத்துல பணமும் வாங்கிண்டு அது பத்தாதுனு சில கோரிக்கைகளை வச்சி உண்ணாவிரதம், உள்ளிருப்புனு போராட்டமும் நட்த்திருக்கா கோவில் பணியாளர்கள்..அதுல அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம்,தரஊதியம் லாம் கேக்கிறது என்ன நியாயம்னு தெரியல...சரி எல்லாம் வல்ல பகவான்ட்ட கோரிக்க வைக்காம அரசாங்கத்துட்ட ஏன் வச்சானு தெரியல..உள்ள இருக்கது ஓண்ணுமில்லனு புரிஞ்சிட்டலோ என்னமோ..
மற்ற மத்துல உள்ள மூடநம்பிக்கைய கிண்டி கிழங்கெடுக்குறதுல இந்த கிறிஸ்தவ சகோதரர்கள் ரொம்ப ஆர்வமா இருப்பாங்க..ஆனா அவங்க்கிட்ட இருக்க மூடநம்பிக்கைய என்னனு சொல்ல?.கல்லறை திருநாளாம்..ஆன்மாக்களுக்கு அஞ்சலியாம்..இதெல்லாம் எந்த பைபிள்ள சொல்லிருக்குனு தெரியல.
-------------------------------------------------------------------------------------------------
அஞ்சு ஏக்கர்ல கஞ்சா சாகுபடிபண்ணி ஆப்பு வாங்கியிருக்கு ஒரு முன்னாள் காக்கி.இதுமாதிரி சில பொறம்போக்குங்க வேலைல இருக்கும் போதுதான் லஞ்சம்,மாமூல்னு காவல்துறை பேர கெடுக்குதுனா..வேலைய விட்டு போயிமா மொள்ளமாரிதனம் பண்ணுறது?..எனக்கென்னவோ இவன் கஞ்சா விக்கிறதுக்குன்னே வேலையவிட்டுடு போய்ருப்பானு தோனுது
மதுரை விமானநிலையத்துக்கு தேவர் பெயரை வைக்ககோரி முருகன்ஜி உண்ணாவிரதம் இருந்து கைதுசெய்யபட்டு இருக்கார்..இதுல நம்ம கேள்வி என்னனா ?...ஏம்பா ஜாதிகலவரத்துல பஸ்ஸ கொழுத்துறது பத்தாதா? விமான நிலையத்தையும் கொழுத்தனுமா..போங்கபூ!! போய் புள்ளகுட்டிகள படிக்க வைங்கப்பூ..
---------------------------------------------------------------------------------------------------
(ஏன்டா உனக்கு இந்த வேலைனு கேக்குறீயளா..என்னை என்ன பண்ண சொல்லுதிக..பதிவு எழுதனுமுனு வந்தாச்சி இப்படி ஏதாவது நாலு விசயம் பேசனுமில்ல..அம்புட்டுதான்)