Tuesday, November 30, 2010

ஒரிஜினல் எந்திரன் டாக்டர் விஜயகாந்த்

                                              
மேக்னடிக் மோட், ஃபைட் மோட் என பல மோட் களை ஆக்டிவேட் செய்து எதிரிகளை பறக்கவிட்டது எந்திரன் ரோபோ. ஆனால் எந்த மோடும் ஆக்டிவேட் செய்யாமல் எதிரிகளை தன் விரல் அசைவில் பறக்கவிட்டவர் எங்கள் கேப்டன்.அதற்கான ஆதாரம் இந்த கானொளி..
                                        
எந்திரனில் ரோபோவின் உடம்பு இரும்பால செஞ்சது ஆனா எங்க தலைவருக்கு உடம்பே ஸ்டீல் தான்.இன்னும் சொல்லனும்னா புல்லட் புரூஃப் பாடி. நம்பலைல..இந்த சீன பாருங்க..
                                          
இதனால சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது இன்னனா..
150 கோடி செலவழித்து எடுத்த எந்திரனில் சண்ட போட்டது ஒரு ரோபோ.அது வெறும் எந்திரம்.எங்கள் தலைவர் தான் ஒரிஜினல் எந்திரன்.

டிஸ்கி:
இந்த பதிவையும் படித்து வோட்டு போடுபவர்களுக்கு விருதகிரி படத்தின் டிக்கெட் இலவசமாக தரப்படும்னு டிஸ்கி போடலாம்னு நினைச்சேன்.ஆனா பல பதிவர்கள் இந்த டிஸ்கி போட்டுவிட்டதால்.என்ன டிஸ்கி போடுறதுனு தெரியல.! (டிஸ்கி போட தெரியலங்கிறது ஒரு டிஸ்கியா)

Monday, November 29, 2010

என்னடா விளம்பரம்..

                                  
விளம்பரங்களின் காதலன் நான்.ஒவ்வொரு முறையும் புதுபுது விளம்பரங்களை பார்க்கும் போது அவை என்னுள் ஒரு இனம்புரியாத பரவசத்தை ஏற்படுத்துகிறது.சில நிமிட கதைகள் விளம்பரங்கள்.சில நொடி கவிதைகள் விளம்பரங்கள்.நான் ஒரு விளம்பரபட இயக்குனரோ விளம்பர வழங்குனரோ இல்லை.விளம்பரங்களின் ரசிகன் நான்.விளம்பரங்களின் காதலன் நான்.

எப்போது இருந்து இந்த காதல் வந்தது என்று தெரியவில்லை. கையில் ரிமோட் இருந்தால் விளம்பரங்களின் ஊடே வேறு வேறு நிகழ்ச்சிக்கு தாவும் மனிதர்களின் இடையே.விளம்பரங்களின் ஊடே வேறு வேறு விளம்பரங்களை தேடும் வித்யாசமான நோய் இது.

சிறு வயதில் என்னிடம் ’என்ன ஆச்சு?’ என்று யாராவது கேட்டால் ’குழந்த அழுகுது --- உட்வர்ட்ஸ் குடுக்க சொல்லு ’ என்று சொல்லிதிரிவேன். ஹூடி பாபா ஹூடி பாபா என்று காற்றில் பறந்து வருவேன்.என் பேச்சின் ஊடே விளம்பர வார்த்தைகள் சரளமாக கலந்து வரும்.

’அம்மா எனக்கு துணி வேண்டாமா..துணி ஈரமா இருக்கு..துணி அன்கம்பர்டபிளா இருக்கு’ என்று வரும் நாப்கின் விளம்பரம் என் வாழ்க்கையில் மறக்கமுடியா விளம்பரம். என் அம்மா ’டேய் துணிய மாத்துடா’னு சொல்லும் போதெல்லாம் ‘அம்மா எனக்கு துணி வேணாமா’ என்று சொல்லி அடிவாங்கியிருக்கிறேன்.(என்னா அடி). நாப்கின் என்றால் என்னவென்றே தெரியாத வயதில் இந்த விளம்பரத்தில் வரும் வெறும் வார்த்தைகள் என்னை ஈர்த்திருக்கின்றன.

எங்கேனும் காபி குடிக்க நேர்ந்தால் நரசூஸ் காப்பியின் தாக்கத்தில் ‘பேஸ் பேஸ் நன்னாயிருக்கு என்பேன்.’மாமி இது பில்டர்காபி?’ என்று கேட்டு ’இது புரூடா’ என்று சொல்லுவார்கள் என்று எதிர் பார்ப்பேன்.ஆனால் யாரும் இதுவரை சொன்னதில்லை..

என்னடா விளம்பரம் என்கிறீர்களா.விளம்பரம் ஒரு சாதாரண வியாபார உத்தி அல்ல.அது ஒரு கலை.பொருளாதார வளர்ச்சியை விளம்பரங்களுக்கு முன் விளம்பரங்களுக்கு பின் என்று பிரிக்கலாம்.விளம்பரங்களின் தாக்கம் அத்தகையது.

விளம்பரங்களின் தேவைகளையும் விளைவுகளையும், நான் ரசித்த விளம்பரங்களின் ஊடே பேச விளைகிறேன் அவ்வளவே...

தொடர்ந்து பேசுவோம்....

Friday, November 26, 2010

சோறு கிடைக்குமா..

                                          
*உலகில் சுமார் 25000 பேர் நாளொன்றுக்கு பசியால் இறக்கின்றனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம்

*உலகில் சுமார் 100 கோடி பேர் உயிர்வாழ தேவையான உணவின்றி பசியால் வாடுகின்றனர் என்கிறது சர்வதேச உணவு திட்ட ஆராய்ச்சி மையம்.

*உலகில் மிக வறுமையில் பசியால் வாடுவோரில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியர் என்கிறது உலகவங்கியின் மதிப்பீடு

அளவற்ற அறிவியல் வளர்ச்சியும் உற்பத்தி பெருக்கமும் உலகமயமாக்கலும்
இருக்கும் நிலையில் மேற்கண்ட புள்ளிவிவரங்கள் எங்ஙனம் நிகழ்கின்றன.


நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 8.5 சதவீதம் என்று மார்தட்டும் ஒரு நாட்டில் 30 சதவீதம் பேர் பசியால் வாடுகின்றனர் என்பது எத்தகைய முரண்.


நகர்மயமாக்கலால் விளைநிலங்கள் மனைகளாகின்றன என்பது ஒரு குற்றச்சாட்டு. இருக்கட்டும்.ஆனால் நாட்டின் தரிசு நிலங்கள் அப்படியே இருக்கிறதே. அதை ஏன் பண்படுத்தி விளைநிலங்களாக மேம்படுத்தவில்லை.

தரிசு நில மேம்பாட்டு திட்டம் என்று ஒன்று இருக்கிறது ஆனால் இதன் மூலம் பண்படுத்தபட்ட ஒரு செண்ட் நிலத்தை கூட நான் இதுவரை பார்த்ததில்லை.எங்கள் ஊரில் பெருநிலங்கள் இன்றும் தரிசாகவே கிடக்கின்றன.எங்கள் ஆட்சியில் 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களை மேம்படுத்தினோம்.எங்கள் ஆட்சியில் 60 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களை மேம்படுத்தினோம் என்று மாறி மாறி அறிக்கை விடும் கழக தலைவர்கள் அதில் ஒரு ஏக்கரையாவது என் கண்களுக்கு காட்டினால் புண்ணியமாக இருக்கும்.

விளைநிலங்களை தன் பிள்ளைகளுக்கும் பேரபிள்ளைகளுக்கும் வாங்கி போட்டு தரிசாக்குகின்றனர் பல பணம் கொழுத்த அரசியல் வாதிகளும் பெருமுதலாளிகளும்.இதனால் உணவின்றி பாதிக்கபடுபோவது என்னவோ என்னை போன்ற நடுத்தரவர்கமும் அந்த 30 சதவீதமும் தான்.

எனக்கு வருத்தமளிக்கும் மற்றொரு விடயம் உணவு பொருள்களை வீணாக்குவது.வீடுகளிலும் உணவகங்களிலும் பெருவிழாக்களிலும் வீணாக கொட்டும் உணவுகள் டன் கணக்கில் வரும். வீட்டிலும் உணவகத்திலும் பாதி உணவை உண்டுவிட்டு பாதியை விட்டு செல்லும் நபர்களை கண்டால் எனக்கு கோபம் கோபமாக வரும்.விழாக்களில் அளவிற்க்கு அதிகமாக சமைத்துவிட்டு மீதியை வீணாக குப்பையில் கொட்டுவதை கண்டு வருந்தியிருக்கிறேன்.

Ferdinand Dimadura வால் இயக்கப்பட்டு 2006 ஆம் ஆண்டு பெர்லின் திரைப்படவிழாவில் விருதுவென்ற
குறும்படம் Chicken a la carte.(இது ஒரு உண்மை சம்பவம்) வசதிபடைத்தவர் உணவின்மீது காட்டும் அலச்சியத்தையும். ஏழைகள் உணவின் மீது காட்டும் பக்தியையும், உள்ளங்கை நெல்லிகனி போல தெளிவாக காட்டியிருப்பார் இயக்குனர். தங்களுக்கு கிடைத்த எச்சில் உணவிற்காக ஜெபம் செய்துவிட்டு உண்ணும் அந்த பக்தி நெகிழச்செய்யும்.இவை என்னுள் பல வினாக்களை எழுப்புகின்றன அவற்றை பிரிதொரு நாளில் விரிவாக பேசலாம்.( நேரம் இருப்பவர்கள் தயவுசெய்து கானொளியை காணவும் உணவின் அருமை புரியும்)
                            

’தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழிப்போம்’ என்றான் பாரதி..நாம் என்ன செய்யபோகிறோம்..

குறைந்தபட்சம் உணவினை வீணாக்குவதையாவது தவிர்க்கலாமே..


தொடர்ந்து பேசுவோம்......

Wednesday, November 24, 2010

அசைவ கொத்து 02

ராஜினாமா செய்துவிட்டு சென்னை திரும்பிய ராஜாவை மேளதாளத்தோடு வரவேற்று அன்பை காட்டியுள்ளனர் மக்கள்.தனக்கு உதவி செய்தவன் திருடனாகவோ ரௌடியாகவோ இருந்தாலும் அவனை ஆதர்சன நாயகனாக கொண்டாடுவது சினிமாவில் மட்டுமே இருக்கும் என எண்ணினேன்.நாங்கள் நிஜத்திலும் அப்படித்தான் என காட்டிவிட்டனர் மக்கள்.

****************************************************************************

நாகர்கோவிலில் பிளஸ் டூ படிக்கும் மாணவர் ஒருவர் தனது வகுப்பாசிரியரை தாக்கியிருக்கிறார்.ஆசிரியர் மாணவர்களை அடிப்பது மாறி இப்பொழுது மாணவர்கள் ஆசிரியரை அடிக்க துவங்கியுள்ளனர்.சம்பவம் நடந்ததற்க்கான காரண காரியங்கள் ஆராயபட வேண்டியது அவசியம். ஆனால் எனது ஆச்சர்யம் ,ஒரு ஆசிரியரை அடிக்கும் அளவிற்க்கு தைரியம் இம்மாணவனுக்கு எங்கிருந்து வந்தது?.ஆசியரின் கண்டிப்பை மரியாதையுடன் ஏற்றுக்கொள்வதை விடுத்து அவரை கேலி செய்யவும் எதிர்க்கவும் வழிகாட்டியது எது?.நமது தமிழ் சினிமாக்களும் இதற்க்கு ஒரு காரணம் என நினைக்கிறேன். ஆசிரியர்களை மொக்கை,அருவை,சருக்குமரம் என்று கேலி செய்வதும் தண்டிக்கும் ஆசிரியரை எதிர்த்து அடிப்பதும் இங்கிருந்து தான் வந்திருக்கும்.

******************************************************************************
                                                  
கடந்த சில நாட்களாக வலையுலகில் லிவிங் டூ கெதர் புயல் அடித்தது, அடிக்கிறது.என்று கரையை கடக்கும் என்று தெரியவில்லை.நமது மங்குனியார் பாணியில் எனது கருத்தை பின்னர் சொல்லுகிறேன் ல்விங் டூ கெதரை ஆதரிப்பவர்கள் பிளஸ் ஓட்டும் எதிர்ப்பவர்கள் மைனஸ் ஓட்டும் போடுங்கள் என்று பதிவிட்டிருந்தால் தமிழ்மணத்தில் வரலாறு காணாத ஓட்டுக்கள் பதிவாகியிருக்கும்

இருவர் மனமொத்து சேர்ந்து வாழ முடிவெடுத்தபின் அவர்கள் திருமணம் செய்தால் என்ன? செய்யாவிட்டால் என்ன?.திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வதால் சமுதாயத்திற்க்கோ பிறருக்கோ எந்த இழப்பும் இல்லை. அதனால் வரும் நன்மை தீமைகள் சம்மத்தபட்டவரையே சாரும். சரியான புரிந்துகொள்ளுதலின் படி இவ்வாழ்க்கையின் சாதக பாதகங்களை அறிந்தே சேர்ந்து வாழ்கிறார்கள்.எதையும் ஏற்க்கும் அல்லது எதிர்கொள்ளும் மனதிடம் அவர்களுக்கு உள்ளது .மற்றபடி திருமணமின்றி சேர்ந்து வாழ்பவர்களை விமர்ச்சிப்பதும் அவர்கள் வாழ்க்கையில், உரிமையில் மூக்கை நுழைப்பதும் முற்றிலும் தவறு..இது ஒரு நிலை..

பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த திருமண முறைகள் இன்று இல்லை. இன்று சாதி மத மறுப்பு திருமணங்களும் காதல் திருமணங்களும் ஏற்றுக்கொள்ளபடுகிறது.விதவை மறுமணமும் விவாகரத்தானோர் மறுமணமும் இயல்பாய் நடக்கிறது.கைபேசியின் உதவியால் திருமணத்திற்க்கு முன்பே இருபாலரும் பேசி ஒருவரை ஒருவர் புரிந்துகொள்கின்றனர்.திருமண கட்டுப்பாட்டால் சிறு சிறு ஊடல்கள் நாளடைவில் இணக்கமாக மாற வாய்ப்புகள் அதிகம்.  திருமணம் செய்து கொண்டு வாழ்வதில் அன்பும் புரிந்து கொள்ளுதலும் சுதந்திரமும் அதிகமாகவே இருக்கிறது.இன்னிலையில் திருமணமின்றி சேர்ந்து வாழ்தல் தேவையில்லாத ஒரு தவறான வழிகாட்டல்.இது ஒரு நிலை

அவரவர்க்கு அவரவர் நிலை..திருமணம் செய்துகொண்டு வாழ்ந்தாலும் திருமணமின்றி சேர்ந்து வாழ்ந்தாலும் இரு மனங்கள் இணைந்தால் தான் நிலையான வாழ்க்கை

டிஸ்கி: படத்துக்கும் பதிவுக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்வர்களுக்கு...லிவிங் டூ கெதர் என்று கூகுளில் தேடினால் இந்த படம் தான் வருகிறது..கேள்வியை கூகுளாண்டவனிடம் கேக்கவும்..

கொத்து தொடரும்...

Wednesday, November 17, 2010

சாதீய சாயம் - ஓட்டரசியல்..

                                                    
எல்லோராலும் மதிக்கப்படவேண்டிய தேசிய தலைவர்கள் பலர் இன்று சில ஓட்டு பொறுக்கி அரசியல் வியாதிகளால் சிறு சாதி வட்டத்துக்குள் அடைக்கப்பட்டுள்ளனர். சாதி மத வேறுபாடின்றி மக்கள் பணி செயத பல தலைவர்களை (அவர் தங்கள் சாதியில் பிறந்தார் என்ற ஒரே காரணத்திற்க்காக) தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் சில ஓட்டு பொறுக்கிகளால் அந்த தலைவர்கள் பிற சாதியினரால் வெறுக்கபடுகிறனர் என்பது நிதர்சனமான உண்மை.

தன் சொத்துபத்தை எல்லாம் விற்று ஏழைகளுக்கு குடுத்த முத்துராமலிங்க தேவர் இன்று தேவர் இனத்திற்க்கு மட்டுமே தலைவராக மாற்றப்பட்டுள்ளார்.சட்டமேதை அம்பேத்கார் தாழ்த்தபட்ட மக்களுக்கு மட்டுமே தலைவர் போல பிம்பங்களை உருவாக்கியுள்ளனர்.காமராசரை நாடார்களின் தலைவராக ஆக்கும் பணி செவ்வனே நடந்து வருகிறது. இதுபோன்று தலைவர்கள் பலரை சாதீய வட்டத்துக்குள் அடைப்பதால் தேவையற்ற காழ்ப்புணர்ச்சிகளே ஏற்படுகிறது. எல்லோராலும் ஏற்றுகொள்ளப்பட வேண்டிய தலைவர்கள் பிற சாதியினரால் வெறுக்கப்படகூடிய சூழல் நிலவுகிறது. தங்கள் சாதியை சார்ந்த தலைவர்களை கொண்டாடும்  அரசியல்வாதிகளின் நோக்கம் அந்த தலைவர்களின் கொள்கைகளையோ, சிந்தனைகளையோ, சாதனைகளையோ மக்களிடம் சேர்ப்பது அல்ல. இவர்களின் நோக்கமெல்லாம் தலைவர்களின் பெயரைசொல்லி ஓட்டு பொறுக்குவது மட்டுமே.

இந்த லிஸ்டில் புதிதாக இணைக்கப்பட்டிருப்பவர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. அவர்கள். வ.உ.சி யின் குருபூஜையை முன்னிட்டு தற்போது பல இடங்களில் கட்டவுட்,பேனர்,போஸ்டர்களில் அமர்ந்துகொண்டு சிரிக்கிறார் வ.உ.சி. கீழே சிரித்துக்கொண்டிருக்கும்  வாழ்த்தும் அன்பு உள்ளங்களுக்கு வ.உ.சி யின் வாழ்க்கை பற்றி தெரியுமா?.வ.உ.சி எழுதிய நூல்களில் ஒன்றின் பெயராவது தெரியுமா?.இதுகாறும் வ.உ.சி மேல் வராத அக்கறை இவர்களுக்கு இப்போது வந்ததன் பிண்ணனி வரவிருக்கும் தேர்தலே.
வ.உ.சி யை வைத்து ஓட்டு பொறுக்க நினைக்கும் இவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

தலைவர்களுக்கு சாதீய சாயம் பூசுவது. கடவுளுக்கு மதங்கள் பூசியுள்ள சாயம் போல் ஆகும்..ஒருவரின் கொள்கைகள் மற்றவருக்கு வெருப்பையே தரும்..
நாட்டிற்காக உழைத்த நல்லவர்களை, நல்லவர்களாக மட்டுமே பார்ப்போம்; சாதீய அடையாளங்களை மறுப்போம்.

Sunday, November 14, 2010

ஒரு டவுட்டும்..ஒரு விருதும்....

நாகர்கோவிலில் இருந்து கேரளாவிற்க்கு கடத்த முயன்ற சுமார் 350 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் கைப்பற்றினர். இதன் மதிப்பு சுமார் 7000 ரூபாய். இது செய்தி.
இனி நம்ம டவுட்..
ஒரு கிலோ ரேஷன் அரிசியின் மதிப்பு 20 ரூபாயா?
 --------------------------------------------------------------------------------

நவம்பர் 16 ல் பிறந்தநாள் காணும்..

எங்கள் உயிரே,
எங்கள் உறவே,
எங்கள் இதயமே,
எங்கள் இதயத்தின் பிரதிபலிப்பே,
எங்களின் மனசாட்சியே,
எங்களின் எதிர்காலமே,
தன்மான சிங்கமே,
உரிமைக் குரலே,
இயக்கத்தின் போர்குரலே,
இளைஞர்களின் வழிகாட்டியே,
       
           நீ வாழிய பல்லாண்டு.

தலைவா தலைமையேற்க வா.. தமிழகத்தில் ஆட்சி அமைப்போம் வா...

இவர் யார் என கண்டுபிடிப்பவர்களுக்கு ‘கொடுத்த காசுக்கு மேல கூவுறாண்டா ங்கொய்யா’ விருது வழங்கி கவுரவிக்கப்படும்
(க்ளூ : இவர் ஒரு அமைச்சரின் வாரிசு)

Wednesday, November 3, 2010

அசைவ கொத்து....

                                                            
         
            எனக்கு சிலர பாத்தாலே கடுப்பா இருக்கும்..என்னைய கடுப்பேத்துறதுல முக்கியமான ஆளு இந்த சுப்பிரமணியசாமி..இவர்(ன்) பேசுர தமிழக்கேட்டாலே பயங்கர எரிச்சலா இருக்கும்..புலிகள் மேலான தடையை நீக்குறது தொடர்பான விசாரணையில சம்மன் இல்லாம ஆஜராகி எக்ஸ்ட்ரா கடுப்பேத்துறார்(ன்)...(ஒரு முட்டை வீச்சு பத்தாது)
                                                        

        கவிஞர் காசிஆனந்தனின் குறுந்தகடு வெளியீட்டு விழாவில் பழ.நெடுமாறன் வெளியிட்ட நிகழ்வுகள் அதிர்ச்சி ரகம். தான் மட்டுமே தமிழர்களுக்கு தலைவனா இருக்கனுமுனு நினச்சி, அப்பவே ஈழபோராட்ட்த்துக்கு குழிபறிச்ச கலைஞரை என்னனு சொல்ல.?.எனக்கு வரவர கலைஞர் மேல இருக்குற மரியாதை கொறஞ்சிகிட்டே வருது..
------------------------------------------------------------------------------------------------------        
       கடவுளுக்கு தொண்டு செய்வது புண்ணியம்னு சொல்லுவா..ஆனா அதுக்கு அரசாங்கத்துல பணமும் வாங்கிண்டு அது பத்தாதுனு சில கோரிக்கைகளை வச்சி உண்ணாவிரதம், உள்ளிருப்புனு போராட்டமும் நட்த்திருக்கா கோவில் பணியாளர்கள்..அதுல அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம்,தரஊதியம் லாம் கேக்கிறது என்ன நியாயம்னு தெரியல...சரி எல்லாம் வல்ல பகவான்ட்ட கோரிக்க வைக்காம அரசாங்கத்துட்ட ஏன் வச்சானு தெரியல..உள்ள இருக்கது ஓண்ணுமில்லனு புரிஞ்சிட்டலோ என்னமோ..

         மற்ற மத்துல உள்ள மூடநம்பிக்கைய கிண்டி கிழங்கெடுக்குறதுல இந்த கிறிஸ்தவ சகோதரர்கள் ரொம்ப ஆர்வமா இருப்பாங்க..ஆனா அவங்க்கிட்ட இருக்க மூடநம்பிக்கைய என்னனு சொல்ல?.கல்லறை திருநாளாம்..ஆன்மாக்களுக்கு அஞ்சலியாம்..இதெல்லாம் எந்த பைபிள்ள சொல்லிருக்குனு தெரியல.
-------------------------------------------------------------------------------------------------

         அஞ்சு ஏக்கர்ல கஞ்சா சாகுபடிபண்ணி ஆப்பு வாங்கியிருக்கு ஒரு முன்னாள் காக்கி.இதுமாதிரி சில பொறம்போக்குங்க வேலைல இருக்கும் போதுதான் லஞ்சம்,மாமூல்னு காவல்துறை பேர கெடுக்குதுனா..வேலைய விட்டு போயிமா மொள்ளமாரிதனம் பண்ணுறது?..எனக்கென்னவோ இவன் கஞ்சா விக்கிறதுக்குன்னே வேலையவிட்டுடு  போய்ருப்பானு தோனுது

        மதுரை விமானநிலையத்துக்கு தேவர் பெயரை வைக்ககோரி முருகன்ஜி உண்ணாவிரதம் இருந்து கைதுசெய்யபட்டு இருக்கார்..இதுல நம்ம கேள்வி என்னனா ?...ஏம்பா ஜாதிகலவரத்துல பஸ்ஸ கொழுத்துறது பத்தாதா? விமான நிலையத்தையும் கொழுத்தனுமா..போங்கபூ!! போய் புள்ளகுட்டிகள படிக்க வைங்கப்பூ..

---------------------------------------------------------------------------------------------------
(ஏன்டா உனக்கு இந்த வேலைனு கேக்குறீயளா..என்னை என்ன பண்ண சொல்லுதிக..பதிவு எழுதனுமுனு வந்தாச்சி இப்படி ஏதாவது நாலு விசயம் பேசனுமில்ல..அம்புட்டுதான்)