தினமும் கூச்சல் அமளி ஒத்திவைப்புனு பாராளுமன்றம் முடங்கி போய் கிடக்கு. தலைவர் ரித்திஸ் பாராளுமன்றத்துல பேசுவது போன்ற ஒரு புகைப்படத்தையாவது பாக்கனும்கிற என் ஆசை இந்த முறையும் நிராசை ஆகிவிடும் போல (ஒரு பேனர் அடிக்கலாம்னு தான்).இப்படியே ஒத்தி வச்சிகிட்டே போனா 2ஜி அலைக்கற்றை ஊழல் பணத்தைவிட, பாராளுமன்றம் நடைபெறாமல் வெட்டியாக செலவாகும் பணம் அதிகமாக போனாலும் போகலாம்
******************************************************************************
ஆந்திர அரசியல்ல காங்கிரஸோட கோஷ்டி, குடிமிபிடி, பதவி சண்டைலாம் சூப்பரா போய்கிட்டு இருக்கு.கிரண்குமார் ரெட்டியும் அன்னை சோனியாஜியும் ஆளையும் டம்மி ஆக்கி ஆட்சியையும் தக்க வச்சிக்கிற கேம் சூப்பரா விளையாடுறாங்க.சிரஞ்சீவிகாரோட கூட்டணி போட்டு எப்படியும் ஆட்சிய காப்பாத்திருவாங்க.ஆனா இதே மாதிரி ஒரு நிலமை தமிழ்நாட்டுல வந்து நம்ம கேப்டன் கையில ஒரு இருபது எம்.எம்.ஏ இருந்துருந்தா, துணை முதலமைச்சர் பதவி. அனைவருக்கும் அமைச்சர் பதவினு ஜமாய்ச்சிருப்பாரு.
******************************************************************************
நடிகர் விஜயகுமாருக்கும் அவர் பொண்ணு வனிதாவுக்கும் என்ன பிரச்சனைனு சரியா தெரியல.அவங்க மாறி மாறி குடுக்குற பேட்டிகளையும் அறிக்கைகளையும் பார்த்த ச்சீ..சீ.... எப்படியோ நக்கீரனுக்கு இன்னும் ஒரு ரெண்டு மூனு வாரத்துக்கு கவர் ஸ்டோரி பஞ்சமில்ல.
******************************************************************************
நம்ம பா.ம.க தலைவர் அண்ணன் கோ.கா.மணி கூட்டணிக்கு இன்னும் காலம் கனியலனு சொல்லிருக்காரு.இதுக்கு எதுக்கு காய் கனினு(டபுள் மீனிங் இல்ல)பேசிகிட்டு. தேர்தல் தேதி அறிவிச்சதுக்கு அப்புறம் பொதுக்குழு செயற்குழுவ கூட்டி எந்த கூட்டணினு ஒட்டு பெட்டி வச்சி வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுக்க வேண்டியது தான் (நம்ம ஜனநாயக ரீதியா போவோம் சார்) என்ன அவங்க நம்மள சேக்குறதுக்கு தான் எப்படி முடிவெடுப்பனுங்கனு தெரியல.
நம்ம முதல்வரை சந்திச்சு சமூக பொருளாதார கல்வி நிலையை அடிப்படையாக கொண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தனுமுனு வழியுருத்துனாராம்.சமூக பொருளாதார நிலமையை பதிவு செய்தால் அரசின் இட ஒதுக்கீடு, இன்ன பிற சலுகைகள் வழங்க உதவியா இருக்கும்.இதுல சாதி என்ன வெங்காயத்துக்குனு தெரியல.எங்களுக்கு இவ்வளவு சாதி வோட்டு இருக்குனு காட்டி பேரம் பேசுரதுக்கு இல்லாம வேற என்னத்துக்கு?.
******************************************************************************
நமக்கெல்லாம் மட்டமான ரசனையாம். எப்படி நடிச்சாலும் பாப்போமாம் சொல்லிருக்காரு நம்ம ஆர்யா.என்ன பண்ணுறது விஜய் படமெல்லாம் ஓடும் போது இப்படி ஒரு நினைப்பு வரத்தான செய்யும்.ஆனா விஜய்க்கு சிலை வச்சி மலையாளத்தான் ரசனை என்னனு காட்டிடாங்க.
******************************************************************************
இப்பவே புத்தாண்டு குறுஞ்செய்திகள் வர ஆரம்பிச்சிடுச்சி. First wishes..Best wishes னு இன்னும் எத்தனை வரும்னு தெரியல.மெஸேஜ டெலிட் பண்ணுறதுக்கு இனி எக்ஸ்ட்ரா டைம் ஒதுக்கணும்..
அம்புட்டுதான்..தொடர்ந்து கொத்துவோம்...


