தினமும் கூச்சல் அமளி ஒத்திவைப்புனு பாராளுமன்றம் முடங்கி போய் கிடக்கு. தலைவர் ரித்திஸ் பாராளுமன்றத்துல பேசுவது போன்ற ஒரு புகைப்படத்தையாவது பாக்கனும்கிற என் ஆசை இந்த முறையும் நிராசை ஆகிவிடும் போல (ஒரு பேனர் அடிக்கலாம்னு தான்).இப்படியே ஒத்தி வச்சிகிட்டே போனா 2ஜி அலைக்கற்றை ஊழல் பணத்தைவிட, பாராளுமன்றம் நடைபெறாமல் வெட்டியாக செலவாகும் பணம் அதிகமாக போனாலும் போகலாம்
******************************************************************************
ஆந்திர அரசியல்ல காங்கிரஸோட கோஷ்டி, குடிமிபிடி, பதவி சண்டைலாம் சூப்பரா போய்கிட்டு இருக்கு.கிரண்குமார் ரெட்டியும் அன்னை சோனியாஜியும் ஆளையும் டம்மி ஆக்கி ஆட்சியையும் தக்க வச்சிக்கிற கேம் சூப்பரா விளையாடுறாங்க.சிரஞ்சீவிகாரோட கூட்டணி போட்டு எப்படியும் ஆட்சிய காப்பாத்திருவாங்க.ஆனா இதே மாதிரி ஒரு நிலமை தமிழ்நாட்டுல வந்து நம்ம கேப்டன் கையில ஒரு இருபது எம்.எம்.ஏ இருந்துருந்தா, துணை முதலமைச்சர் பதவி. அனைவருக்கும் அமைச்சர் பதவினு ஜமாய்ச்சிருப்பாரு.
******************************************************************************
நடிகர் விஜயகுமாருக்கும் அவர் பொண்ணு வனிதாவுக்கும் என்ன பிரச்சனைனு சரியா தெரியல.அவங்க மாறி மாறி குடுக்குற பேட்டிகளையும் அறிக்கைகளையும் பார்த்த ச்சீ..சீ.... எப்படியோ நக்கீரனுக்கு இன்னும் ஒரு ரெண்டு மூனு வாரத்துக்கு கவர் ஸ்டோரி பஞ்சமில்ல.
******************************************************************************
நம்ம பா.ம.க தலைவர் அண்ணன் கோ.கா.மணி கூட்டணிக்கு இன்னும் காலம் கனியலனு சொல்லிருக்காரு.இதுக்கு எதுக்கு காய் கனினு(டபுள் மீனிங் இல்ல)பேசிகிட்டு. தேர்தல் தேதி அறிவிச்சதுக்கு அப்புறம் பொதுக்குழு செயற்குழுவ கூட்டி எந்த கூட்டணினு ஒட்டு பெட்டி வச்சி வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுக்க வேண்டியது தான் (நம்ம ஜனநாயக ரீதியா போவோம் சார்) என்ன அவங்க நம்மள சேக்குறதுக்கு தான் எப்படி முடிவெடுப்பனுங்கனு தெரியல.
நம்ம முதல்வரை சந்திச்சு சமூக பொருளாதார கல்வி நிலையை அடிப்படையாக கொண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தனுமுனு வழியுருத்துனாராம்.சமூக பொருளாதார நிலமையை பதிவு செய்தால் அரசின் இட ஒதுக்கீடு, இன்ன பிற சலுகைகள் வழங்க உதவியா இருக்கும்.இதுல சாதி என்ன வெங்காயத்துக்குனு தெரியல.எங்களுக்கு இவ்வளவு சாதி வோட்டு இருக்குனு காட்டி பேரம் பேசுரதுக்கு இல்லாம வேற என்னத்துக்கு?.
******************************************************************************
நமக்கெல்லாம் மட்டமான ரசனையாம். எப்படி நடிச்சாலும் பாப்போமாம் சொல்லிருக்காரு நம்ம ஆர்யா.என்ன பண்ணுறது விஜய் படமெல்லாம் ஓடும் போது இப்படி ஒரு நினைப்பு வரத்தான செய்யும்.ஆனா விஜய்க்கு சிலை வச்சி மலையாளத்தான் ரசனை என்னனு காட்டிடாங்க.
******************************************************************************
இப்பவே புத்தாண்டு குறுஞ்செய்திகள் வர ஆரம்பிச்சிடுச்சி. First wishes..Best wishes னு இன்னும் எத்தனை வரும்னு தெரியல.மெஸேஜ டெலிட் பண்ணுறதுக்கு இனி எக்ஸ்ட்ரா டைம் ஒதுக்கணும்..
அம்புட்டுதான்..தொடர்ந்து கொத்துவோம்...
95 comments:
me the first...
அசத்தலான தொகுப்பு ஹரிஸ்
தொடர்ந்து கொத்துங்க
கொத்துல புடிச்ச கொத்து .ஆனா விஜய்க்கு சிலை வச்சி மலையாளத்தான் ரசனை என்னனு காட்டிடாங்க.சும்மா நச்சுன்னு இருக்கு
@கும்மி
வாங்க பாஸ்..
@nis
கொத்திருவோம்..
நன்றி ஃபர்கன்..
வழக்கம்போல் கொத்து அருமை.
good kothu.......kothikitte irunga....
@கும்மி
நன்றி பாஸ்..
ரைட் ஹாஜா..
//தலைவர் ரித்திஸ் பாராளுமன்றத்துல பேசுவது போன்ற ஒரு புகைப்படத்தையாவது பாக்கனும்கிற என் ஆசை இந்த முறையும் நிராசை ஆகிவிடும் போல// இதுவரை சாதாரண அரசியல்வாதிகளை ஏகதாளம் செய்துகொண்டிருந்த ஹரிஸ் அவர்களே... இன்று அகில உலக அரசியல் ஆசான் ரிதீசை கிண்டல் செய்யும் அளவுக்கு வந்ததை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது. இது ஒபாமாவின் சதி என்பதும் நீங்கள் அதன் அம்பு என்பதும் தெரிகிறது. எரிமலை எப்படி பொறுக்கும்... இவண்.. முரட்டுக்காளை ரித்தீஷ் ரசிகர் மன்றம், முதல் குறுக்கு தெரு, டோக்கியோ சிட்டி.
நமக்கெல்லாம் மட்டமான ரசனையாம். எப்படி நடிச்சாலும் பாப்போமாம் சொல்லிருக்காரு நம்ம ஆர்யா.என்ன பண்ணுறது விஜய் படமெல்லாம் ஓடும் போது இப்படி ஒரு நினைப்பு வரத்தான செய்யும்.ஆனா விஜய்க்கு சிலை வச்சி மலையாளத்தான் ரசனை என்னனு காட்டிடாங்க.////
நச்சுன்னு இருக்கு
ஏகதாளம் எனும் வார்த்தைக்கு பதில் எகத்தாளம் என போட்டுக்கொள்ளவும். டங்கு ஸ்லிப்.
//ஆனா விஜய்க்கு சிலை வச்சி மலையாளத்தான் ரசனை என்னனு காட்டிடாங்க//
Super! :-)
//நிராசை ஆகிவிடும் போல (ஒரு பேனர் அடிக்கலாம்னு தான்).//
நீங்களும் ரித்தீஸ் ரசிகரா ..? வாழ்க ..!!
//இதுல சாதி என்ன வெங்காயத்துக்குனு தெரியல.எங்களுக்கு இவ்வளவு சாதி வோட்டு இருக்குனு காட்டி பேரம் பேசுரதுக்கு இல்லாம வேற என்னத்துக்கு?./
சரியா பாய்ன்ட புடிக்கிறீங்க ..!!
//ஒரு நினைப்பு வரத்தான செய்யும்.ஆனா விஜய்க்கு சிலை வச்சி மலையாளத்தான் ரசனை என்னனு காட்டிடாங்க.//
இந்த நக்கல்தான வேனாம்கறது .. வெளிநாட்டுல ஓடாத படம் நம்ம ஊர்ல ஓடும் ., அந்த மாதிரிதான் இதுவும் ..!!
அம்புட்டுதான்..தொடர்ந்து கொத்துவோம்... //.
என்னத்த?
கொத்து நல்லாயிருக்குங்க... இப்படியே கொத்துங்க...
@சிவகுமார்
நான் ஒபாமாவின் அம்பா..ஐயோ பயமாயிருக்கு..
தலைவர் ரித்திஸின் பேச்சை கேட்க நினைத்தது குற்றமா? அல்லது பேனர் அடிக்க நினைத்தது குற்றமா?
எரிமலை எப்படி பொறுக்கும்...//
பாத்து ஓவரா பொங்கிறபோகுது..
டோக்கியோ சிட்டி.//
ஆகா..தலைக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருப்பாங்க போலயே...
நன்றி..ரஹீம் கஸாலி..
ஏகதாளம் எனும் வார்த்தைக்கு பதில் எகத்தாளம் என போட்டுக்கொள்ளவும். டங்கு ஸ்லிப்.//
ஹி..ஹி..பரவாயில்ல ஐ அண்டர்ஸ்டேண்ட்..
நன்றி,,ஜீ..
ப.செல்வக்குமார் said...
நீங்களும் ரித்தீஸ் ரசிகரா ..?//
ஹி..ஹி..நீங்களுமா..
Arun Prasath said...
அம்புட்டுதான்..தொடர்ந்து கொத்துவோம்... //.
என்னத்த?//
எல்லாத்தையும் தான்..
@சங்கவி
நன்றி பாஸ்...
நல்லா கொத்துற மாப்பு...
இந்த வார பஞ்ச், தத்துவம் அப்டி இப்டின்னு எதாச்சு சேத்து கொத்தவேண்டிதான.
நன்றி தல..
//இந்த வார பஞ்ச், தத்துவம் அப்டி இப்டின்னு எதாச்சு சேத்து கொத்தவேண்டிதான//
நான் கொத்துவேன் நீங்க படிக்கனுமில்ல.(சரக்கு இல்ல தல.).
முதலில் பின்னூட்டம் இட்டபோது, அனைத்துக் கருத்துக்களையும் கூற முடியவில்லை.
சாதி வாரி கணக்கெடுப்பு அவசியத் தேவை. சாதிக் கட்சிகள் அவர்களது சாதி எண்ணிக்கையை காரணம் காட்டி பேரம் பேசுவதற்காக இந்த கணக்கெடுப்பை வலியுறுத்தினாலும், பயன்கள் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும்.
இதற்கு முன்னர் சாதிவாரி கணக்கெடுப்பு ஆங்கிலேயர் காலத்தில்தான் நடைபெற்றது. அந்தக் கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே, இன்றும் இடப்பங்கீடு உள்ளிட்ட பலவும் நடைபெறுகின்றன. ஆனால், இன்று நிலவும் சூழலுக்கேற்ப இடப்பங்கீடு விகிதாச்சாரம் வேண்டுமெனில் சாதிவாரி தகவல்கள் இருந்தால் மட்டுமே முடியும்.
சாதிவாரி கணக்கெடுப்பு கூடாது என்று வாதிடுபவர்கள், தங்கள் சாதியின் விகிதாச்சாரத்திற்கு சற்றும் சம்பந்தமில்லாமல் அனைத்து பதவிகளையும் அவர்களே ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றனர். மக்கள் தொகையில் 3.5 % மட்டுமே இருக்கும் ஒரு குறிப்பிட்ட சாதியினர் உயர் பதவிகளில் 70 %-க்கும் மேலாக இருந்து வருகிறார்கள்
இருக்கும் இடப்பங்கீடும் எப்படியெல்லாம் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பது உள்ளிட்ட, பல்வேறு விஷயங்கள் தருமி அவர்களின் இந்தப் பதிவில் அலசப்பட்டுள்ளன.
நன்றி பாஸ்,,
படிச்சிட்டு வர்றேன்..
//பா.ம.க //
ஹி ஹி
//நக்கீரனுக்கு இன்னும் ஒரு ரெண்டு மூனு வாரத்துக்கு கவர் ஸ்டோரி பஞ்சமில்ல.//
அதெல்லாம் இன்னும் படிக்கிறீங்களா?!
சூப்பர் கொத்து..
அசைவம்னு சொன்னதும் ஏ ஜோக் எதிர்பார்த்தேன்
நான் எதிர்பார்த்தது இல்லை
அனைவரும் அவசியம் இப்பதிவினை பாருங்கள். அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.
nalla aakkam nanbare
polurdhayanithi
@கும்மி
படித்தேன் பாஸ்..மிக தெளிவான விளக்கம்.
ஆனால் சாதி என்பதை கணக்கில் கொள்ளவே கூடாது என்பதே என் எண்ணம்.இந்த இடஒதுக்கீட்டு முறையால் பாதிக்க பட்டவர்களில் நானும் ஒருவன்..என்னுடன் படித்த மாணவர்களில் ST 2 பேர் தாழ்த்தப்பட்டோர் 7 பேர்,MBC 9 பேர் BC&OC 22 பேர் இதில் ST,SC,MBC யினர் அனைவரும் அரசு பணியில் உள்ளனர்..அதில் 18ல் 12 பேர் நல்ல பொருளாதார பிண்ணனி உள்ளவர்கள்..பிற்பட்டவகுப்பை சேர்ந்தவர்களில் 10 க்கும் மேற்பட்டவர்கள் மிகவும் வறுமை நிலையில் உள்ளவர்கள்..இது ஒரு சிறு உதாரணம் தான்.இது போல் என்னால் பல நிகழ்வுகளை குறிப்பிட முடியும்.
தாழ்த்தப்பட்டோரிலும் சென்ற தலைமுறையில் பயன் பெற்றவர்களின் பிள்ளைகள் தான் தற்பொழுது பயன்பெருகிறார்கள்.இன்னும் ஏழையாக உள்ள ஒரு சமூகம் அப்படியே உள்ளது.
பொருளாதார ரீதியான இடபங்கீடு வழங்கும் போது அது எந்த சாதியினராக இருந்தாலும் உண்மையிலேயே வறுமை நிலையில் இருந்தால் அவர்களை சென்றடையும் என்பது என் எண்ணம்
காக்டெயில் சரக்கு மாதிரி இது காக்டெயில் பதிவா?!!!! கலந்து கட்டி அடிக்கிறீங்க!!
கொத்துக்கள் அருமை.
குறிப்பாக விஜய் சிலை பற்றிய உங்கள் கருத்து நச் பாய்ண்ட்..
கொத்து அருமை
நன்றி
பாலாஜி சரவணன்..
@பார்வையாளன்
என்ன எதிர்பார்த்தீங்க
@ஆர்.கே.சதீஷ்குமார்..
இங்கவந்து அப்படியெல்லாம் எதிர்பாக்க கூடாது
நன்றி போளூர் தயாநிதி
நல்ல கொத்துறீங்க
நன்றி இந்திரா
நன்றி தொப்பி தொப்பி..
நன்றி பங்காளி கார்த்திக்.
49
50
i vadai
ரைட்டு..
எத்தன நாள் ஆசை பங்காளி..
ஹரிஸ் said...
ரைட்டு..
எத்தன நாள் ஆசை பங்காளி.///
ரொம்ப நாளா வடையே கிடைக்கல. ஏதோ உங்க கடைல இப்ப கெடைச்சிருக்கு
ரொம்ப சந்தோஷம்...
ஹ்ம்ம் நல்ல பகிர்வு.. சாதி வாரி ஒதுக்கீட்டால் இருமுறை பாதிக்கப் பட்டவன் என்ற முறையில் அதை எதிர்க்கிறேன்
நன்றி..எல்.கே..
கொத்து நல்லாயிருக்குங்க
கொத்து நல்லாயிருக்க காரம் தான் கொஞ்சம் கூடிவிட்டது.. ஆனால் அருமை...
நன்றி...வெறும்பயன்.
நன்றி ம.தி.சுதா.
டேஸ்டி கொத்து :)
நன்றி பிரபு..
சாதிவாரி குறித்த உங்கள் கருத்திற்கு என் முழு ஆதரவு .கொத்துகளும் கருத்துகளும் அருமை .தொடருங்கள்
நன்றி..நா.மணிவண்ணன்..
//தலைவர் ரித்திஸ் பாராளுமன்றத்துல பேசுவது போன்ற ஒரு புகைப்படத்தையாவது பாக்கனும்கிற என் ஆசை இந்த முறையும் நிராசை ஆகிவிடும் போல//
இப்பலாம் அண்ணன் படம் நடிக்காதது எங்களுக்கு ரொம்ப வருத்தம் தெரியுமா. முன்னலாம் 300 ரூபாயும் பிரியாணியும் வாங்கி தருவார் படம் பாக்க!!
50 ரூபாய்க்கு வாங்கியோ சுட்டோ மாலை போட்டா 500வ பாக்கெட்ல வைப்பார்!!!
முகவைகுமார் வாழ்க! ரித்திஷ் குமார் வாழ்க :)))))))))))))
//2ஜி அலைக்கற்றை ஊழல் பணத்தைவிட, பாராளுமன்றம் நடைபெறாமல் வெட்டியாக செலவாகும் பணம் அதிகமாக போனாலும் போகலாம்//
அதுவும் சரிதான்..
//இப்படியே ஒத்தி வச்சிகிட்டே போனா 2ஜி அலைக்கற்றை ஊழல் பணத்தைவிட, பாராளுமன்றம் நடைபெறாமல் வெட்டியாக செலவாகும் பணம் அதிகமாக போனாலும் போகலாம்//
நாடாளுமன்றம் நடந்தா மட்டும் என்ன வெட்டி முறிச்சுடப் போறாங்க?இன்று எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல் தகவல்படி--ஒரு உறுப்பினருக்கு ஆகும் செலவு ஆண்டுக்கு ரூ.60,95000.மொத்த உறுப்பினர்களுக்கான செலவு ரூ.1627,36,50000/.போதுமா?
நல்ல கொத்து!
மக்கள் தொகையில் 3.5 % மட்டுமே இருக்கும் ஒரு குறிப்பிட்ட சாதியினர் உயர் பதவிகளில் 70 %-க்கும் மேலாக இருந்து வருகிறார்கள். இதனை சரி செய்வது எப்படி என்பதனை இடப்பங்கீடு கூடாது என்பவர்கள் கூறட்டும்.
மனதில் தைரியமிருப்பவர்கள் கீழுள்ள செய்தியையும் படித்து, சாதீயம் எவ்வளவு மூர்க்கமாக இருக்கின்றது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
தலித் மாணவி ஒருவரை பள்ளியில் வைத்து குப்பைகளை சாப்பிட செய்துள்ளனர்.
இவ்வளவு எதிர்ப்புகளுக்கு இடையிலும் கல்வி பயிலும் அவர்களுக்கு, அவர்களுக்குரிய பங்கீடும் கொடுக்கமாட்டார்களாம்.
எங்கே அய்யா போயிற்று மனிதம்?
:-(
சுட்டி சரியாக வேலை செய்யவில்லை. மன்னிக்கவும். இங்கே திருத்தியுள்ளேன்.
தலித் மாணவி ஒருவரை பள்ளியில் வைத்து குப்பைகளை சாப்பிட செய்துள்ளனர்.
@கும்மி
படித்தேன் மிக கொடுமையான சம்பவம்.
சாதி வெறிகளும்.சாதீய அடக்குமுறைகளும் கண்டிக்கபட வேண்டியதே..
//மக்கள் தொகையில் 3.5 % மட்டுமே இருக்கும் ஒரு குறிப்பிட்ட சாதியினர் உயர் பதவிகளில் 70 %-க்கும் மேலாக இருந்து வருகிறார்கள். இதனை சரி செய்வது எப்படி என்பதனை இடப்பங்கீடு கூடாது என்பவர்கள் கூறட்டும்.//
பாஸ் இதுல ஏன் நம்ம கம்பேர்பண்ணனும்.பதவியில் இருப்பவர்கள் இருந்துவிட்டு போகட்டும்.நான் பேசுறது இன்னும் பொருளாதார நிலைல வறுமைல இருக்குற மக்கள பத்தி..பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கி இவங்களோட வாழ்வாதாரத்த பொறுளாதார நிலைய உயர்த்திட்டம்னா..அடுத்த தலைமுறை தானா அந்த பதிவிகளை கைபற்றிவிடும் என்பது என் எண்ணம்.
நன்றி ஆமினா..
நீங்களும் முகவை குமார் ரசிகரா?,,
நன்றி பாரத் பாரதி,
@சென்னை பித்தன்
ஆச்சரியம்..புள்ளிவிவரங்களுக்கு நன்றி ஐயா..
1st visit. edu maamoola...
சகா தலைவர் ரித்திஸ் பத்தி எழுதுனது செம கொத்து. சூப்பர்
//பாஸ் இதுல ஏன் நம்ம கம்பேர்பண்ணனும்.பதவியில் இருப்பவர்கள் இருந்துவிட்டு போகட்டும்.நான் பேசுறது இன்னும் பொருளாதார நிலைல வறுமைல இருக்குற மக்கள பத்தி..//
பதவியில் இருப்பவர்களை நாம் இறங்கச்சொல்லவில்லை. ஆனால், அந்தப் பதவிகளுக்கு அவர்கள் சாதியினர் மட்டுமே வரவேண்டும் என்று இவர்கள் செய்வதையெல்லாம் தருமி அவர்களின் பதிவில் மிக விளக்கமாகக் கொடுத்துள்ளாரே.
இனிவரும் தலைமுறையினரில், அனைவரும் அவரவருக்குரிய விகிதாச்சாரத்தில் வாய்ப்புகளை பெறவேண்டும் என்பதே அனைத்து சமூகத்திற்கும் ஏற்புடையதாக இருக்கும்.
---
நீங்கள் நாகர்கோயிலில் இருப்பதால், மேலாடை அணியும் போராட்டம் பற்றி அங்கிருக்கும் மக்களிடம் இருந்து அறிந்துகொள்ள முயற்சியுங்கள். சாதீயம் எப்படியெல்லாம் தன்னுடைய கோரப்பல்லை காட்டியது என்பதையும், அது எப்படி இன்னும் நீள்கிறது என்பதையும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
--
இவையெல்லாம் கடந்த நூற்றாண்டில் நடந்தவை; இப்பொழுது அப்படியெல்லாம் ஏதும் நடப்பதில்லை; எனவே இட ஒதுக்கீடு கூடாது என்று கூறுபவர்களின் malicious intent க்கு நீங்களும் பலியாகிவிடாதீர்கள். அவர்கள் சாதியினர் தற்பொழுது வகிக்கும் சலுகைகள் பறிபோகிறது என்றவுடன் விளக்குமாறு போராட்டம் நடத்தியவர்கள் என்ன கூறுகின்றனர் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
1st visit. edu maamoola...//
எனக்கு பதில் எங்க தலைவர் கேப்டன் தருவாரு வாங்கிக்கங்க போலீஸ்...
@கும்மி
பாஸ்..இத பத்தி நேரம் கிடச்சா தனியா பதிவிடுறேன்.
சாதி இல்லாத,பொருளாதார ஏற்றத்தாழ்வு இல்லாத சமதர்ம சமுதாயம் தான் தேவை,,சாதி வாரி இட ஒதுக்கீட்டு மூலமா அதை அடையமுடியாது என்றே எண்ணுகிறேன்..
@அருண்
நன்றி சகா..
சரியான கொத்துதான்..
நன்றி பாபு..
இந்த கொத்துவில் நானும் சேர்ந்துக்கிறேன்,கைலாம் ஒரே ரத்தமா இருக்கு ரெஸ்ட் எடுத்திட்டு வந்து பின்னுட்டம் எழுதுகிறேன்
வாங்க..வாங்க..சேர்ந்து கொத்தலாம்..
சூப்பர்
தொகுப்பு ஹரிஸ்
தொடர்ந்து கொத்துங்க
Nice:))
நன்றி...சரவணன்..
நன்றி..ஆனந்தி..
எங்க பாஸ் ட்ரைனிங் எடுத்தீங்க எழுத.???
வாங்க பாஸ்..ஏன் இந்த கேள்வி பாஸ்?..
//நண்பா இங்க வந்து பாருங்க..நாங்களும் கேப்டன் புகழ் பாடீருக்கோம்
http://nanharish.blogspot.com/2010/11/blog-post_30.html// என என் பதிவகமான nanbendaa.blogspot.com இல் கருத்துரை இட்டதற்கு நன்றி ஹரிஷ். விஜயகாந்த் நம்மை போல பலரையும் ஈர்த்து வருவது புலனாகிறது. புலன் விசாரணையில் மேலும் பல தகவல்கள் வந்து விழும் போலுள்ளது!
அடுத்த பதிவு எப்பங்க...
விரைவில்..
நிறைய நியூஸ்.... ஹ்ம்ம்.. தேங்க்ஸ்.. :-))
நன்றி ஆனந்தி...
நன்றி ஆனந்தி...
Post a Comment